/* */

மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்..

தங்களது மாதாந்திர ஊக்கத்தொகையை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்த கோரி   மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்..
X

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

பாண்டிச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய்1000 லிருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் தற்போது வரை மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் வழங்கப்படும் கண்டன ஆர்ப்பாட்டம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் என பல தொடர்ந்து தற்போது வரை அரசு செவிசாய்க்கவில்லை.

எனவே தமிழக அரசு ஊக்கத் தொகையை உயர்த்தி தர வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலைமறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது உதவித் தொகையை உடனடியாக உயர்த்தித் தர கோரி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன .

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Updated On: 14 Dec 2021 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு