/* */

ஊத்துக்காடு இருளர் குடியிருப்பு பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 433 தொகுப்பு வீடுகள் 5 ஒன்றியங்களில் கட்டப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

ஊத்துக்காடு இருளர் குடியிருப்பு பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு.
X

ஊத்துக்காடு பகுதியில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் மற்றும் சிங்காடிவாக்கத்தில் 100 குடியிருப்புகள், காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டு குளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகள், உத்திரமேரூர் ஒன்றியம் மலையங்குளம் ஊராட்சியில் 178, குடியிருப்புகளும், திருப்பெரும்புதூர், காட்ரம்பாக்கத்தில் 31 குடியிருப்புகள் மொத்தம் 443 குடியிருப்புகள் 19 கோடியே 37 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை அடைந்து வருகிறது.

இந்நிலையில் புதியதாக ஆட்சியராக பதவி ஏற்றுக்கொண்ட கலைச்செல்வி மோகன் இன்று காலை ஊத்துக்காடு பகுதியில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளின் நிலை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பணிகளை விரைவாக முடித்து ஒப்படைக்கவும், அரசு விதிகளின்படி உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஏற்கனவே மலையாங்குளம் மற்றும் குண்டு குளம் பகுதியில் முழுமை அடைந்து ஐந்து சதவீத பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் அனைத்தும் இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமை பெறும் என தெரிய வருகிறது.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம், ஊராட்சி முகமை பொறியாளர் குழு மற்றும் ஒப்பந்ததாரர் என அனைவரும் உடன் இருந்தனர்.

கடந்த ஆட்சியராக இருந்த ஆர்த்தி இப்பணிகளை அப்போது பார்வையிட்ட போது பணிகள் முறையாக செய்யவில்லை என ஒப்பந்ததாரர் மற்றும் ஊரக வளர்ச்சி அதிகாரிகளை மீண்டும் முறையாக செய்ய அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 May 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு