/* */

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக மீது வழக்குகள் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மீதும் இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக மீது வழக்குகள் பதிவு
X

 காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக உள்ளிட்ட பத்து அரசியல் கட்சியின் மீது 25 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் நடத்தை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 16 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை 25 வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆளும் கட்சியான திமுக மீது 7 வழக்குகளும், அதிமுக மீது 5 வழக்குகளும், பாமக மீது 3 வழக்குகளும்,தேமுதிக 3 வழக்குகளும், நாம் தமிழர் கட்சி மீது 2 வழக்குகளும், காங்கிரஸ் பாஜக மீது தலா 1 வழக்குகளும், மற்ற கட்சியினரின் மீது 3 வழக்குகளும் என 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் தனது செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் எச்சரிக்கை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 April 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!