காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் இளம் டாக்டர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் இளம் டாக்டர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த  இளம் டாக்டர் ஜோயஸ் ஜோஸ்வா.

காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் இரு பேருந்துகளுக்கு இடையில் சிக்கிய இளம் பிசியோதெரபி டாக்டர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை மேம்பாலத்தில் அரசு பேருந்துக்கும் தனியார் பேருந்துக்கும் இடையே இருசக்கர வாகனம் சிக்கிய விபத்தில் பிசியோதெரபி மருத்துவர் ஜோய்ஸ் ஜோஸ்வா (வயது25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிவ காஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் இலுப்பப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜோய்ஸ் ஜோஸ்வா (வயது 24 ). இவர் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

காஞ்சிபுரம் அடுத்த இந்திரா நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் பணியை முடித்துக் கொண்டு தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜோஸ்வா அரசு பேருந்துக்கும் , தனியார் பேருந்துக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலின் பெயரில் வந்த தாலுகா போலீசார் பிசியோதெரபி மருத்துவர் ஜோஸ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பிசியோதெரபி மருத்துவர் ஜோய்ஸ் ஜோஸ்வா கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்த 4 நாட்களில் சாலை விபத்தில் இளம் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விலை உயர்ந்த வாகனங்களை வாங்கும் இளைஞர்கள் அதை அதிவேகமாக ஓட்டி செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பெற்றோரும் இதுபோன்று விலை உயர்ந்த வாகனங்களை வாங்கி தருவதை தவிர்த்து உயிரிழப்பையும் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture