/* */

காஞ்சிபுரம் அருகே 3.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சீபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் மினி லாரிகளில் ரேஷன் அரிசி கடத்திய தொடர்பாக 2 பேர் வாகனங்களுடன் கைது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே 3.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட இருவர்.

காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறைக்கு கிடைத்த ரசகிய தகவல் கிடைத்தது.

காவல் துறை இயக்குநர் ஆபாஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையில் போலீசார், சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் கோவில் பின்புறம் சோதனை செய்தனர்.

அங்கு 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு மினி லாரியில் மூட்டை மூட்டையாக மாற்றி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை பிடித்து மூட்டைகளை சோதனை செய்த போது சுமார் 50 கிலோ எடை கொண்ட 64 மூட்டைகளில் மொத்தம் சுமார் 3200 கிலோ ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய கடத்தியது தெரிந்தது. இதையொட்டி அப்பு (எ) இளங்கோவன் (23), கார்த்தி (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 28 March 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது