/* */

காஞ்சிபுரத்தில் அதிக திறன் கொண்ட 2 மின்மாற்றிகள்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

ஆனந்தாபேட்டை மற்றும் ரயில்வே சாலை ஆகிய இரு பகுதிகளில் சீரான மின்சாரம் அளிக்கும் வகையிலும் , தடையின்றி மின்சாரம் வழங்க அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் அதிக திறன் கொண்ட 2 மின்மாற்றிகள்: எம்எல்ஏ துவக்கி வைப்பு
X

ஆனந்தா பேட்டை பகுதிகளில் 100 கே.வி திறன் கொண்ட புதிய மின் மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ஏழிலரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் நகரம் 51வார்டுகள் பகுதிகளாக அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலை பெருகியதால் நகர விரிவாக்கம் அதிகளவில் ஏற்பட்டு குடியிருப்புகள் அதிகரித்தது. தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி காரணமாக மின்சாதன உபயோகம் பெருமளவில் அதிகரித்தது. இதன் காரணமாக மின்சாரம் சீராக அளிக்க முடியாமல் வீடுகளில் அவ்வப்போது பகுதி ஏற்படுவதாக தொடர்பு புகார் வந்தது.

மேலும் நகரின் விரிவாக்கம் கருத்தில் கொண்டு புதிய மின்மாற்றிகளை அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனின் கோரிக்கை அடிப்படையில் காஞ்சிபுரத்திற்கு அதிக திறன் கொண்ட மின்மாற்றிகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் எல்ஐசி அலுவலகம் அருகே மற்றும் ஆனந்தா பேட்டை பகுதிகளில் 100 கே வி திறன் கொண்ட புதிய மின் மாற்றிகள் மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டது.

இதனை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.ஏழிலரசன் துவக்கி வைத்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மின்வாரிய பொறியாளர்‌ இளையராஜா, நகர திமுக செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மண்டலகுழு தலைவர் சந்துரு, நகர்மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், கமல், கௌதமிதிருமாதாசன் மற்றும் தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 May 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்