/* */

4 ஆண்டு நல்லாட்சி: பா.வளர்மதி பெருமிதம்

4 ஆண்டுகள் நல்லாட்சி கொடுத்துள்ளதால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்று பா.வளர்மதி நம்பிக்கை தெரிவித்தார்.

HIGHLIGHTS

4 ஆண்டு நல்லாட்சி: பா.வளர்மதி பெருமிதம்
X

ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பா.வளர்மதி இன்று ஆதம்பாக்கத்தில், இரண்டாம் கட்டமாக வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடைகள், வீடுகள் குடிசைப்பகுதி என அனைத்து விதமான மக்களையும் சந்தித்து ஓட்டு சேகரித்தார். பா வளர்மதிக்கு ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பா வளர்மதி, 'வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கேட்டு வருகிறேன். மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான காரணம், கடந்த நான்கு ஆண்டுகளாக நல்ல ஆட்சியை நடத்தியுள்ளார். மக்கள் பாதுகாப்போடு வாழக் கூடிய ஆட்சியை கொடுத்துள்ளார். பெண்களுக்கான பல்வேறு சலுகைகள் அறிக்கையில் உள்ளது. தமிழ்நாட்டில் கட்டப்பஞ்சாயத்து வன்முறை மக்களை ஏமாற்றுவது இதுபோன்ற அடாவடியான செயல்களைச் செய்யக்கூடிய திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளார்கள்.

பல்வேறு கோரிக்கைகள் மக்கள் வைத்துள்ளார்கள். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர் செய்யாததை இந்த முறை தான் ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். மக்கள் விரும்பும் ஆட்சியாக அதிமுக இருக்கிறது. மிகப்பெரிய பலமாக பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு இணைந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் பொய் சொல்லியே பழக்கப்பட்டவர். ஊழலைப் பற்றி பேசக் கூடிய தகுதி அற்றவர். ஊழலுக்காக சிறைக்குச் சென்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு அதிமுகவை ஊழல் ஆட்சி என்று கூறுகிறார். எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நம்பிக்கையில் பொய்யைக் கூறி கொண்டிருக்கிறார், ஸ்டாலின். அவர் கூறும் பொய் என்றும் எடுபடாது.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இல்லாத தேர்தல் என்பது வருத்தமானது' என அவர் கூறினார்.

Updated On: 3 April 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...