/* */

ஆட்கொல்லி புலியை கண்காணிப்பதில் தீவிரம்

நாளை காலை மீண்டும் பிடிக்கும் பணி தொடரும் நிலையில் கூடுதலாக 40 நவீன கேமராக்கள் பொருத்தபட்டு கண்காணிக்கபடும் என தகவல்.

HIGHLIGHTS

ஆட்கொல்லி புலியை கண்காணிப்பதில் தீவிரம்
X

புலிகள் காப்பக துணை களஇயக்குனர் சச்சின் துக்காராம்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள T23 என்ற எண் கொண்டு அழைக்கபட்டு வரும் 12 வயது மதிக்க தக்க ஆண் புலி கடந்த சில மாதங்களாக கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் சுற்றுவட்டார பகுதிகளிலும் மசினகுடி பகுதியிலும் 4 பேரை அடித்து கொன்றது. வயது முதிர்வின் காரணமாக மனிதர்களை கொன்று வரும் இந்த புலியை சுட்டு பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் கடந்த 8 நாட்களாக பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வனத்துறையினர், வேட்டைதடுப்பு காவலர்கள், கேரளா வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், அதிரடி படையினர் என 5 குழுக்களாக பிரிந்து புலியை தேடினர். காலை 7.30 மணிக்கு புலி தென்பட்டு அரை மணி நேரத்தில் மாயமானது. சுமார் 8 மணி நேரமாக தேடியு புலியை கண்டு பிடிக்க முடியாததால் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புலிகள் காப்பக துணை களஇயக்குனர் சச்சின் துக்காராம்: நேற்று ஆதிவாசி அடித்து கொன்ற இடத்தில் புலி தென்பட்டதால் பிடிக்க முயற்சி மேற்கொள்ளது. ஆனால் புதருக்குள் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் மோப்பநாய் கொண்டு தேடியும் சிக்கவில்லை. எனவே இன்றைய தேடும் பணி நிறைவடைந்துள்து. நாளை காலை மீண்டும் பணி தொடங்கும். இதனால் வன பகுதிகளில் ஆங்காங்கே 40 நவீன கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது. 3 டுரோன்கள் மூலம் தேடும் பணிக்காக பயன்படுத்தபட்டு வருகிறது. தேவைபட்டால் கும்கி யனைகளும் பயன்படுத்தபடும். எனவே புலியை பிடிக்கும் வரை கிராம மக்கள் கால்நடைகளை வன பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட கூடாது. இரவு நேரங்களில் தனியாக வீட்டைவிட்டு வெளியில் வர கூடாது என்றார். மேலும் புலியை சுட்டு பிடிக்க தான் உத்தரவு வந்துள்ளதாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.


Updated On: 2 Oct 2021 4:46 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி