Begin typing your search above and press return to search.
ஓட்டேரி பாலப் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கொன்னூர் நெடுஞ்சாலை, ஓட்டேரி பாலப் பகுதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, மழை வெள்ளத்தை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், தாயகம் கவி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.