/* */

தென் இந்தியாவில் முதன்முறையாக பிராணிகளுக்கான எரிவாயு தகன மேடை

தென் இந்தியாவில் முதன்முறையாக கிண்டியில் செல்ல பிராணிகளுக்கான எரிவாயு தகன மேடை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தென் இந்தியாவில் முதன்முறையாக பிராணிகளுக்கான எரிவாயு தகன மேடை
X

எரிவாயு மேடையை திறந்து வைத்த சென்னை மாநகராட்சி கமிஷனர் கக்கன்சிங் பேடி.

சென்னை கிண்டியில் உள்ள புளூ கிராஸ் அமைப்பு சார்பில் தென் இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ. 57 லட்சம் செலவில் செல்ல பிராணிகள் மற்றும் கால் நடைகளுக்கான எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. எரிவாயு தகன மேடையை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை வில்லிங்டன் நிறுவன தலைவர் எல்.கணேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் எரிவாயு தகன மேடையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதில் இந்திய புளூ கிராஸ் தலைவர் சின்னி கிருஷ்ணன், பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பின்னர் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: செல்ல பிராணிகள், கால் நடைகளுக்காக சென்னையில் முதன் முறையாக தகன மேடை அமைத்து இருப்பது நல்ல விசயம். சென்னை மாநகராட்சி சார்பில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் மேம்படுத்திடவும், தண்டையார்பேட்டையில் கால்நடைகளுக்கான தகன மேடை அமைக்கப்படும். கால் நடைகளை விரும்புகிறவர்களுக்காக இறுதி சடங்குகளை செய்ய மாநகராட்சிக்கு தன்னார்வ அமைப்பான புளூ கிராஸ் உதவியாக இருப்பது மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Updated On: 30 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்