/* */

5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: அக்டோபர் 10 நடைபெறும் என தகவல்.

தமிழகத்தில் 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் 10-ம் தேதி 30 ஆயிரம் சிறப்பு முகாம்களில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

HIGHLIGHTS

5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: அக்டோபர் 10 நடைபெறும் என தகவல்.
X

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு சிறப்பு பிரிவை பார்வையிட்ட அமைச்சர்

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு சிறப்பு பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து டெங்குவின் தாக்கம் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. அனைத்து துறைகளிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்து இருக்கிறோம். அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு உடல் வெப்ப நிலை சோதனை மூலம் காய்ச்சல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மெகா தடுப்பூசி முகாம்களை கடந்த வாரம் முதலமைச்சரே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

75% மக்கள் முதல் தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்டாலே கொரோனா பரவல் பாதிப்பை குறைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 33 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றும் 15 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 64% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 25% பேர் 2-வது தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 30 ஆயிரம் சிறப்பு முகாம் மூலம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என கூறினார்.

Updated On: 5 Oct 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...