/* */

நாமக்கல் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு - பொதுமக்கள் பீதி

நாமக்கல் மாவட்டத்தில் பெரும் வெடிச்சத்தத்துடன் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் பீதியைடந்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு - பொதுமக்கள் பீதி
X

சித்தரிப்பு காட்சி 

நாமக்கல், மோகனூர், ப.வேலூர், இராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை 11 மணியளவில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

இதனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், சூப்பர் மார்கெட்டுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கண்ணாடி ஜன்னல்கள் படபடத்தன. வீடுகளில் கடும் அதிர்வு ஏற்பட்டதால் கதவுகள் அதிர்ந்தன. நில அதிர்வை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளை வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். பலரும் பெரும் பீதியடைந்தனர்.

இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உணரப்பட்டது நிலநடுக்கமா அல்லது ஏதாவது பெரிய வெடிப்பு சம்பவமா என்பது இதுவரை தெரியவில்லை.

Updated On: 14 Dec 2021 12:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க