பவானிசாகரில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

பவானிசாகரில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
X
தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட்டில், ஈரோடு மாவட்டம் பவனிசாகருக்கு மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தனது முதல் விவசாய பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தது. விவசாயம் மற்றும் அது சார்ந்ததுறைகளுக்காக ரூ.34 ஆயிரத்து 220.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட்டில், ஈரோடு மாவட்டம் பவனிசாகருக்கு மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அறிவிக்கப்பட்டது. எல்லா கிராமங்களிலும் கலைஞர் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகப்பட்டுள்ளது. அதற்கு ரூ.ஆயிரத்து 245.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயத்தின் பழமையையும், பாரம்பரியத்தையும் மீட்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

உணவு உற்பத்தியில் தரம், விவசாயிகளுக்கு லாபம் ஆகியவற்றை அடிப்படை யாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள விவசாய பட்ஜெட்டில், கரும்புக்கு ஊக்கத்தொகையும், நெல் கொள்முதல் விலை உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, நாகை வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபோக சாகுபடி நிலங்கள் இருமடங்காக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையாக, இயற்கை வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த விவசாய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:

நெல் கொள்முதல் விலை, சாதாரண ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2,015. சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 என்று நிர்ணயம். அதற்கு ரூ.319.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரும்புக்கு வழங்கப்படும் உற்பத்தி ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.42.50 வீதம், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்படும். 2020-21 ம் அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ 150 வீதம் நேரடியாக கரும்பு விவசாயிகள் வங்கி கணக்கில் வழங்கப்பட உள்ளது.

பம்புசெட்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக, மின்சார வாரியத்துக்கு ரூ.4 ஆயிரத்து 508.23 கோடி ஒதுக்கீடு.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விவசாயிகளின் காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசு பங்காக ரூ.2,327 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டத்துக்கு ரூ.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டத்துக்கு ரூ.140 கோடி மானியம்.

முதல்வரின் சூரிய சக்தி பம்புசெட் திட்டத்துக்கு ரூ.114.68 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும்

வேளாண் கல்வியை வலுப்படுத்த ரூ.573.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.

விவசாய பட்டதாரிகள், இதர இளைஞர்கள் வேளாண் பணியில் ஈடுபடுவதை ஊக்குவிக்க ரூ.7.68 கோடி ஒதுக்கீடு.பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டம்.

பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும்.

பனை மரங்கள் வெட்டுவதற்கு கலெக்டர் அனுமதி கட்டாயம் வேண்டும்.

இயற்கை விசாயத்துக்காக தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்த, இயற்கை வேளாண் வளர்ச் சித்திட்டம் செயல்படுத்தப்படும்.

நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.300.86 கோடி ஒதுக்கீடு.

இயற்கை வேளாண்மை, ஏற்று மதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு அளிக்கப்படும்.

வேளாண் தொடர்பான முக்கிய பிரச்னைக்கு தீர்வு காண தலைமைகி செயலர் தலைமையில் உயர்நிலைக் குழு.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம் படுத்த இரண்டு லட்சம் ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.2.18 கோடி ஒதுக்கீடு.

கடலுார் மாவட்டத்தில் பலாவுக் கான சிறப்பு மையம் தொடக்கம். 3 ஏக்கர் நிலம் வைத்திருக்கும்

வேளாண் கல்வியை வலுப்படுத்த ரூ.573.24 கோடி ஒதுக்கீடு. நம்மாழ்வார் ஆராய்ச்சி மையம்

நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.

விவசாய பட்டதாரிகள், இதர இளைஞர்கள் வேளாண் பணியில் ஈடுபடுவதை ஊக்குவிக்க ரூ.7.68 கோடி ஒதுக்கீடு.பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டம்.

பனைவெல்ல பயன்பாட்டை அதி கரிக்கும் வகையில் ரேஷன் கடை களில் கருப்பட்டி விற்பனை செய் யப்படும்.

கடலுார் மாவட்டத்தில் பலாவுக் கான சிறப்பு மையம் தொடக்கம். 3 ஏக்கர் நிலம் வைத்திருக்கும்

விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க ரூ.10 ஆயிரம் மானியத்துக்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு.

இப்போதுள்ள 50 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.12.80 கோடி. புதிதாக 10 உழவர் சந்தை அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.

திருவண்ணாமலை, திருவாரூர், வேலுார், தஞ்சை, கடலுார், நாகை, ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருளை சேமிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு ரூ.3.5 கோடியில் 28 உலர்கலங்கள்.

ஏற்றுமதி குறித்த விவரங்களுக்காக சென்னை கிண்டியில் ஒரு கோடி ரூபாயில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம்.

தேனி, திண்டுக்கல், கரூர், துாத்துக்குடி, அரியலுார், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிப்பு.

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்சநல்லுார் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.

மீன்பதப்படுத்தலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோவை, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என்று 5 தொழில்கற்கும் மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி தொடங்க முதல் கட்ட நிதியாக

ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்.

வேளாண்மையில் தொழில்முனைவோர்களை ஈர்க்க வேளாண்தொழில் முனைப்பு மையம்.

திருச்சி - நாகை மாவட்டத்துக்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான தடமாக அறிவிப்பு.

தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பயிரிடச்செய்து இப்போதுள்ள நிகர சாகுபடி பரப்பான 60 சதவீதம் என்பதை 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை.

10 லட்சம் எக்டர் அளவுள்ள இருபோக சாகுபடி நிலங்கள், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 2 மடங்காக, அதா வது 20 லட்சம் எக்டராக உயர்த் தப்படும். இவை உட்பட வேளாண், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் போன்ற துறைகளின் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Tags

Next Story