அந்தியூரில் வரட்டுப்பள்ளம் அணையில் 96.940 மில்லியன் கன அடி நீர் திறப்பு

அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதி அடிவாரத்தில் 33.46 அடி உயரத்தில் அமைந்துள்ள வரட்டுப்பள்ளம் அணையில் தற்போது நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, விவசாயிகள் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர், இக்கோரிக்கையை ஏற்று அரசு புதிய ஆயக்கட்டு பகுதியின் 2,924 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இன்று முதல் ஜூன் 16 வரை 75 நாட்களுக்கு 96.940 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது, இதன்படி இன்று காலை முதல் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது, இந்த நீர்த்திறப்பால் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், பாசனத்திற்காக வழங்கப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu