நம்பியூர் பேரூராட்சியில் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நம்பியூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு இடங்களில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்புகளை திடீரென துண்டித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், நம்பியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன, இங்கு ஒவ்வொரு மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டு என்ற முறையில் குடிநீர் வரி, சொத்து வரி மற்றும் இதர வரியினங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது, பொதுமக்களின் இந்த திடீர் முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நம்பியூர் காவல்துறையினர் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர், அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் இணைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, அமைதி திரும்பியது, பின்னர் திருப்தியடைந்த பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் முன்னறிவிப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu