ஈரோடு சந்தையில் மாடுகள் மாபெரும் விற்பனை

ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று நடைபெற்ற கால்நடை சந்தை, மாடுகள் மற்றும் பிற கால்நடைகளின் விற்பனை சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் இந்த சந்தையில் கலந்து கொண்டு பெருமளவில் மாடுகளை வாங்கிச் சென்றனர். சந்தையில் விற்பனைக்கு வந்த மாடுகளில் சுமார் 90 சதவீதம் விற்று முடிந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சந்தையில் 6,000 முதல் ₹23,000 வரை விலையில் 60 கன்றுகள், ₹23,000 முதல் ₹70,000 வரை விலையில் 250 எருமைகள் மற்றும் ₹23,000 முதல் ₹80,000 வரை விலையில் 350 பசு மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மேலும் ₹65,000-ஐ கடந்த முழுக்கலப்பின மாடுகளும் அதிக விலையில் விற்றன.
இதையடுத்து, புன்செய்புளியம்பட்டியில் நடைபெற்ற கால்நடை சந்தையிலும், 250 வெள்ளாடுகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்காக வந்தன. ஐந்து முதல் 10 கிலோ வெள்ளாடுகள் ₹4,500 முதல் ₹8,000 வரை, செம்மறி ஆடுகள் ₹3,500 முதல் ₹7,000 வரை விற்பனையானன. அதேபோல், கோழிகள் மற்றும் சேவல்களுக்கு ₹1,000 முதல் ₹10,000 வரை விலை போனது.
மொத்தத்தில் இந்த சந்தையின் மூலம் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உருவானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu