தக்காளி விலையில் திடீர் மாற்றம்

தக்காளி விலையில் திடீர் மாற்றம்
X
ஈரோடு மார்க்கெட்டில், தக்காளியின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது

ஈரோடு வ.உ.சி. பூங்கா தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளி மற்றும் பல்வேறு காய்கறிகள் தினமும் வரத்து ஆகின்றன. சமீபத்தில், காய்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கிலோக்கு ₹10க்குத் விற்கப்பட்ட தக்காளி, நேற்று ₹25 முதல் ₹30 வரை உயர்ந்தது. இதேபோல், பீன்ஸ் ₹70 இலிருந்து ₹100 ஆக உயர்ந்தது. ₹30க்குக் கிடைத்த கேரட் ₹50 ஆகவும், ₹15க்கு விற்ற முள்ளங்கி ₹30 ஆகவும் உயர்ந்தது. கத்தரிக்காய் ₹25லிருந்து ₹40, வெண்டைக்காய் மற்றும் பாவற்காய் ₹30லிருந்து ₹40 ஆகவும் அதிகரித்தன.

Tags

Next Story
ai in future agriculture