/* */

ஈரோடு ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் சிறப்பு பூஜை

கார்த்திகை 1 ம் தேதியை முன்னிட்டு ஈரோடு ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் சிறப்பு பூஜை
X

ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் மாலை அணிந்து கொள்ளும் பக்தர்.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஐய்யப்பனை தரிசனம் செய்ய செல்வார்கள். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து ஐய்யப்பன் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கார்த்திகை 1-ம் தேதியான இன்று அதிகாலையிலேயே ஐய்யப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் சபரிமலைக்கு செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் உள்ள கோயிலில் துளசிமணி மாலை அணிந்து இன்று விரதத்தை தொடங்கினார்கள். இதற்காக காலை 6 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாலை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 17 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்