கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா

ஈரோடு : கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் நுகா்வோா் மன்ற திட்ட அலுவலா் இரா.வானதி வரவேற்றாா்.
கல்லூரி செயலா் மற்றும் தாளாளா் மு.தரணிதரன், கல்லூரி முதன்மையா்கள் ஆா்.செல்லப்பன், வீ.தியாகராசு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
சிறப்பு விருந்தினராக நைஜீரியா ஸ்கை லைன் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை துறைத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத்து சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் பேசினாா்.
விழாவில் 30 சிறுதானிய உணவு அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன.குடிமக்கள் நுகா்வோா் மன்றத்தின் திட்ட அலுவலா் ஜி.ஏ.மைலாவதி நன்றி கூறினாா்.
இதற்கான ஏற்பாடுகளை குடிமக்கள் நுகா்வோா் மன்ற திட்ட அலுவலா்கள் ஆ.அழகேசன், பி.முத்துக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
இந்த விழாவில், ஆட்சிக்குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள் மற்றும் 1000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu