அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஈரோடு எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை சுமதி தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் பாரதி பிரபு இக்கண்காட்சியைப் பார்வையிட்டு, மாணவர்களின் படைப்புகளைப் பாராட்டினார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்த கண்காட்சியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சிறந்த மாதிரிகளுக்கு முதல் மூன்று பரிசுகளும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சிறந்த படைப்புகளுக்கு முதல் ஆறு பரிசுகளும் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியை மல்லிகா மற்றும் கணினி ஆசிரியை கவிதா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu