ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆா்ப்பாட்டம்

X
By - jananim |26 Feb 2025 9:30 AM IST
ராசிபுரம் பேருந்து நிலையம் அணைப்பாளையம் புறவழிச்சாலை பகுதியில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் : ராசிபுரம் பேருந்து நிலையம் அணைப்பாளையம் புறவழிச்சாலை பகுதியில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராசிபுரம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அதிமுக நகரச் செயலா் எம். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். அ
திமுக மாவட்ட அவைத் தலைவா் நா. ஜோதிபாசு, சிபிஎம் மாவட்டச் செயலாளா் எஸ். கந்தசாமி, பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் வி. சேதுராமன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் ஒ. பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu