/* */

3 லட்சம் நிவாரண நிதி வழங்கிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளையில் உள்ள ஆசிரியர்கள் சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதி அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

3 லட்சம் நிவாரண நிதி வழங்கிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
X

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளையில் உள்ள ஆசிரியர்கள் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதனை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு செய்து கொண்டிருந்த வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி வழங்கினார்.

நிதியில் 2.50 லட்சம் ரூபாயை அம்மருத்துவமனையின் கூடுதல் கட்டடம் கட்டும் திட்டத்தில் ஆக்சிஜன் இணைப்புக்கான பைப்லைன் அமைக்கும் பணிக்கும், 50,000 ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது கல்லுாரி முதல்வர் டாக்டர் மணி, கூட்டணி மாவட்ட பொருளாளர் தங்கராஜ், பெருந்துறை வட்டார செயலாளர் மலையப்பசாமி, மொடக்குறிச்சி வட்டார செயலாளர் வரதராஜன், ஈரோடு வட்டார செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 4 Jun 2021 9:54 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்