/* */

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரியில் காவல் உதவி மையம் திறப்பு

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காவல் உதவி மையத்தை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக முழுநேர கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் அதிகளவில் வர தொடங்கினர்.

இந்நிலையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு மருத்துவமனை குறித்த விபரம், படுக்கை வசதிகள் விபரம், சிகிச்சை பெறுவோர் விபரம், ஆம்புலன்ஸ் உதவி போன்றவற்றை செய்து தரும் வகையில் காவல் உதவி மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்திலேயே கட்டப்பட்டுள்ள இந்த காவல் உதவி மையத்தை கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினரை வைத்து அமைச்சர் முத்துசாமி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் கொரானாவிற்கு பலியான காவல்துறையினரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார். முன்னதாக காலிங்கராயன் விருந்தினர் இல்லத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார் அதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துவது பற்றி பொல்லான் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட எஸ்பி சசிமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...