/* */

சார், எங்க ஊரு கோவிலை காணோம் : வடிவேலு படப்பாணியில் போஸ்டரால் பரபரப்பு

கிணற்றை காணோம் என்று வடிவேலு பாணியில், காணாமல் போன கோவிலை மீட்டுத்தரக்கோரி, பெருந்துறையில் பாஜக பிரமுகர் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

திரைப்படம் ஒன்றி, நடிகர் வடிவேலு கிணறு காணவில்லை என்று கூறி போலீசாரை அலைய விடும் காட்சி, பொதுமக்களால் ரசிக்கப்பட்டது. இதைப்போல் நம்ப முடியாத சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்துள்ளது.

ஆனால், இம்முறை காணாமல் போனது கிணறு இல்லை, கோவில். காணாமல் போன கோவிலை மீட்டுத்தர வலியுறுத்தியும், கோவிலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தங்க சன்மானம் வழங்கப்படும் எனவும், பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவர், பெருந்துறை நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர், பெருந்துறை அடுத்த பட்டக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவ பட்டக்காரன் சசிதயாள். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளராக உள்ளார்.

பெருந்துறை தாசில்தார் கார்த்திக்கை சந்தித்து, சசிதயாள் ஒரு மனு அளித்தார். அதில், பெருந்துறை அடுத்த சீனாபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிவன் கோவில் இருந்து வந்தது. இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். ஆனால், இந்த கோவில் திடீரென காணவில்லை; அங்கிருந்த சாமி சிலைகளையும் காணவில்லை. விசாரணை மேற்கொண்டு காணாமல் போன சிலைகளையும், கோவிலையும் மீட்டுத்தர வேண்டும் என்று, அதில் கூறியிருந்தார்.

அத்துடன் நிற்காமல், இன்று பெருந்துறை பகுதி முழுவதும், பழமை வாய்ந்த சீனாபுரம் சிவன் கோவிலை காணவில்லை. கோவிலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று, சசிதயாள் தரப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. பெருந்துறை பகுதி மக்கள், இதை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு சென்றனர்.

Updated On: 4 July 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்