/* */

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் அரசு சித்தா பிரிவு தொடக்கம்!

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், அரசின் சித்தா மருத்துவப்பிரிவு, 100 படுக்கைகளுடன் புதிதாக தொடங்கப்பட்டு, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு கொங்கு  கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் அரசு சித்தா பிரிவு தொடக்கம்!
X

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் இன்னமும் குறையவில்லை. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர சிறப்பு மையங்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனாவால் மதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல், பெருந்துறையில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் 250 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதே கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், அரசின் சித்தா மருத்துவப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 100 படுக்கை வசதிகள் உள்ள இந்த சித்தா மருத்துவ பிரிவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Updated On: 12 Jun 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’