/* */

அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

பெருந்துறை அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் மூன்று பேர் படுகாயம்

HIGHLIGHTS

அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
X

சேலத்தில் இருந்து 35 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சோளிபாளையம் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

எனினும் விபத்தில் படுகாயமடைந்திருந்த பஸ் டிரைவர் செந்தில் குமார், கன்டெக்டர் கதிரேசன் மற்றும் பயணி ஒருவர் என மூன்று பேரையும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மற்ற பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பினர். இதனையடுத்து ஜேசிபி வண்டி வரவழைத்து பஸ்ஸை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 7 May 2021 2:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  4. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  5. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  6. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  9. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  10. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!