/* */

பாலியல் தொல்லை புகாரை கண்டுகொள்ளாத தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

புகாருக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பாலியல் தொல்லை புகாரை கண்டுகொள்ளாத தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
X

போராட்டக்களத்தில் பள்ளி மாணவிகள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில் நேற்று முன் தினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விரைந்த போலீசார், ஆசியர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். இதில் உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாணவிகள் மற்றும் பெற்றோர் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On: 22 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்