பெருந்துறையில் நாளை மாபெரும் போராட்டம்

பெருந்துறையில் நாளை  மாபெரும்  போராட்டம்
X
பெருந்துறையில் சுற்றுச்சூழல் மாசுவுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பினர்

பெருந்துறையில் நாளை மாபெரும் போராட்டம் – மாசுவுக்கு எதிராக மக்களின் குரல்

பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்படும் தனியார் ஸ்டீல் ஆலையால் ஓடைகளில் அமிலக் கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதை எதிர்த்து, அந்த நிறுவனத்தின் இசைவாணையை ரத்து செய்ய வேண்டும், அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பெருந்துறை சிப்காட் பகுதி மக்கள் நலச் சங்கம் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலைய பணிகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஏப்ரல் 3ஆம் தேதி காலை, சிப்காட் பகுதியில் உள்ள மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்பாக, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா மற்றும் மாவட்ட உதவி பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்தவித உறுதியான உத்தரவாதமும் கிடைக்காததால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என மக்கள் நலச் சங்கத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இதனால், நாளைய தினம் பெருந்துறையில் ஆர்ப்பாட்டம் மையம்கொள்ளவுள்ள நிலையில், அரசு மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா? மக்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா? என்பதற்கான பதில் எதிர்பார்க்கப்படுகிறது

Tags

Next Story
ai solutions for small business