ஈரோடு எஸ்.பியாக சுஜாதா பொறுப்பேற்பு

ஈரோடு எஸ்.பியாக சுஜாதா பொறுப்பேற்பு
ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றிய ஜவகர், சென்னை வடக்கு மண்டல சி.பி.சி.ஐ.டி. எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையில், திருப்பூர் மாநகர துணை ஆணையராக (சட்டம் & ஒழுங்கு) பணியாற்றிய சுஜாதா, ஈரோடு எஸ்.பியாக நியமிக்கப்பட்டு நேற்று தனது பொறுப்பை ஏற்றார்.
பதவி ஏற்பின் பின்னர் நிருபர்களிடம் பேசிய எஸ்.பி. சுஜாதா, மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முழுமையாகப் புரிந்துகொண்டு விரிவாக பேட்டி அளிக்கவுள்ளேன். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதியாக மேற்கொள்வேன், என்று தெரிவித்தார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி.க்கள் உட்பட காவல் துறையினர், எஸ்.பி. சுஜாதாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu