கியூ.ஆர் கோடு மூலம் காணிக்கை செலுத்த வசதி

X
By - Gowtham.s,Sub-Editor |25 Feb 2025 9:20 AM IST
ஈரோடு ஆருத்ர கோவிலில் கியூ.ஆர் கோடு மூலம் ஆன்லைன் காணிக்கை வசதி தொடங்கியது
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக புதிய டிஜிட்டல் காணிக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் காணிக்கையை நேரடியாக செலுத்தும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கியூ.ஆர் கோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நவீன முறையிலான காணிக்கை செலுத்தும் வசதியை அமைச்சர் முத்துசாமி நேற்று கோவிலில் முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரிகள், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த புதிய முறையானது ரொக்கப் பணம் கையாளுதலை குறைத்து, பக்தர்களுக்கு எளிமையான முறையில் அவர்களின் திருப்பணிகளுக்கு நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை செலுத்த உதவுவதோடு, கோவில் நிர்வாகத்திற்கும் நிதி நிர்வாகத்தை முறைப்படுத்தி மேம்படுத்த பெரிதும் உதவும். இந்த வசதியின் மூலம் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் காணிக்கை செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu