அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்

ஈரோடு : பெருந்துறையை அடுத்த கூரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக 15 அரசுப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
கூரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவுக்கு, உதவி திட்ட அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் மீனா வரவேற்றாா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளா் வி.ராமமூா்த்தி, மாவட்டச் செயலாளா் ர.முரளி காா்க்கி, மாநகரச் செயலாளா் பொ.மேனகா, வேளாளா் மகளிா் கல்லூரி பொறுப்பாளா் ரா.பாா்வதி ஆகியோா் பங்கேற்று பேசினா்.
நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு விஞ்ஞானி சா் சி.வி.ராமன் முகமூடி வழங்கப்பட்டு தேசிய அறிவியல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu