நாமக்கல் மாவட்டத்தில் 15 மாதங்களில் 2,407 சைபர் குற்ற வழக்குகள்

15 மாதத்தில் 2,407 சைபர் குற்ற வழக்குகள் பதிவு - ரூ.14.75 கோடி மோசடி: நாமக்கல் எஸ்.பி., தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 15 மாதங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 2,407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.14.75 கோடி மோசடி நடந்துள்ளதாகவும் நாமக்கல் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், "சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குற்றம் நடந்த பின் குற்றவாளிகளைக் கண்டறிந்து பணத்தை மீட்பது சவாலாக உள்ளது" என்றார். 2024ல் மட்டும் 1,907 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகி ரூ.14.75 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பணம் முடக்கப்பட்டுள்ளதாகவும், 85 லட்சம் ரூபாய் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நடப்பாண்டில் இதுவரை 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இது நாளொன்றுக்கு சராசரியாக ஐந்து வழக்குகள் என்ற அளவில் உள்ளதாகவும் தெரிவித்தார். மோசடி நடந்தால் உடனடியாக '1930' என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், இழந்த பணத்தை முடக்க முடியும் என்றும், மொபைல் திருட்டு நடந்தால் www.pothalails என்ற இணையதளத்தில் எண்ணைப் பதிவு செய்தால் உடனடியாக மொபைலை முடக்க முடியும் என்றும் எஸ்.பி. அறிவுறுத்தினார். பொதுமக்கள் ஆன்லைன் டிரேடிங், திட்டங்களில் முதலீடு, இரட்டை பணம், டாஸ்க் எதிர்கொள்ளுதல் போன்ற மோசடிகளை நம்பாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu