கோவிலுக்கு சென்ற பயணம் விபத்தில் முடிந்தது

கோவிலுக்கு சென்ற பயணம் துயரமாக முடிந்தது விபத்தில் தங்கை பலி
புன்செய்புளியம்பட்டி: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஓதிமலை முருகன் கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர், கோர விபத்தில் சிக்கியதில் தங்கை உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
சத்தியமங்கலம், காந்தி நகரத்தை சேர்ந்த சீனிவாசன் (29), பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். நேற்று, அவர் தனது மனைவி ஹரி மயூரா (27), தாய் கவிதா (50), தங்கை விவேகா (26) ஆகியோரை டாடா ஜெஸ்ட் காரில் அழைத்துக்கொண்டு ஓதிமலை முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றார்.
பவானிசாகரை அடுத்த சீரங்கராயன் கரடு அருகே உள்ள வளைவில் சென்றபோது, சீனிவாசன் காரின் மீது கட்டுப்பாட்டை இழந்து, வனப்பகுதியில் கவிழ்ந்தார். இதில் விவேகா தலையில் கடும் காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற மூவரும் பலத்த காயம் அடைந்த நிலையில், உடனே சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த விவேகா, கோவை சிங்காநல்லூரில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu