/* */

பொது சுகாதார ஆய்வகம் அமைக்கும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

நகர் நல வாழ்வு மையம், பொது சுகாதார ஆய்வகம் அமைக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பொது சுகாதார ஆய்வகம் அமைக்கும் பணியை துவக்கி வைத்த  அமைச்சர் முத்துசாமி
X

ஆய்வக பணியினை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாநகர் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 20 நகர்புற சுகாதார நல வாழ்வு மையமும், தலா 22 லட்சம் மதிப்பீட்டில் 2 மாநகர பொது சுகாதார ஆய்வகமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கென 5.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் திட்ட பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!