அணையிலிருந்து நீர் வழங்க, விவசாயிகள் போராட்டம்

அணையிலிருந்து நீர் வழங்க, விவசாயிகள்   போராட்டம்
X
புன்செய்புளியம்பட்டியில், விவசாயிகள் பாசன நீர் வழங்காததால், போராட முடிவுவெடுத்தனர்

விவசாயிகள் பாசன நீருக்காக போராட முடிவு

புன்செய்புளியம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அலுவலக திறப்பு விழா மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. நிறுவனர் ஈசன் முருகசாமி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, புங்கம்பள்ளி, விண்ண பள்ளி, நால்ரோடு, கீழ் முடுதுறை, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கிளைகள் தொடங்கப்பட்டன.

அதன்பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பவானிசாகர் அணை கட்ட நிலம் வழங்கிய எட்டு கிராம விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பாசன வசதி தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பவானிசாகர் அணையிலிருந்து நீரேற்று முறையில் தண்ணீரை பம்பிங் செய்து, ஏரி அமைத்து பாசன வசதி செய்து தர அரசை வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டது.

விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

பவானிசாகர் அணை கட்டுவதற்காக நிலங்களை விட்டுவிட்ட விவசாயிகள், புதுப்பீர் கடவு, பட்ரமங்கலம், பசுவபாளையம், ராஜன் நகர், காந்தி நகர், வடவள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தற்போதும் வசித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு மாற்று இடம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. பாசன நீர் வழங்கப்படாததால், அவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மூன்று மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமான பவானிசாகர் அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகள், நீர் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது.

எனவே, அவர்களின் உரிமையான பாசன நீரை வழங்கும் திட்டம் அரசால் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக, தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளோம் என்றனர்.

Tags

Next Story