ரம்ஜானை முன்னிட்டு, சந்தையில் ஆடு விற்பனை குறைவு

ரம்ஜானை முன்னிட்டு, சந்தையில் ஆடு விற்பனை குறைவு
X
புன்செய்புளியம்பட்டியில், ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால், வழக்கத்திற்கு மாறாக ஆடுகளின் விற்பனை குறைந்தது

ரம்ஜானை முன்னிட்டு புன்செய்புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை குறைவு

புன்செய்புளியம்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை கூடியும் கால்நடை சந்தையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க, விற்க வருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால், வழக்கத்திற்கு மாறாக ஆடுகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்த வரத்து காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது. பொதுவாக ஆயிரக்கணக்கான வெள்ளாடு, செம்மறி ஆடுகள் சந்தைக்கு வருவதால், வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். ஆனால், இந்த முறை வெறும் 300 ஆடுகளே சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.

விற்பனைக்கான ஆடு குறைந்த போதிலும், 10 கிலோ ஆட்டின் விலை ₹6,000 முதல் ₹7,000 வரை நிர்ணயிக்கப்பட்டது. எனினும், வரத்து குறைவால் விற்பனை சலசலப்பில்லாமல், மொத்தமாக வெறும் ₹20 லட்சத்திற்கே முடிவடைந்தது.

Tags

Next Story