முள் காட்டில் அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு

X
By - Nandhinis Sub-Editor |1 April 2025 11:20 AM IST
கவுந்தப்பாடியில், அடையாளம் தெரியாத முதியவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது
முள் காட்டில் அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு
கோபி: கவுந்தப்பாடி அருகே மின்னவேட்டுவம்பாளையத்தில் உள்ள தரிசு நில முள் காட்டில், அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் கிடைத்தவுடன், கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இயற்கை உபாதைக்கு கழிக்க வந்தபோது மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu