குடும்ப கலவரத்தின் கொடூர முடிவு

கோபியில் அதிர்ச்சி சம்பவம் கழுத்தை அறுத்த மகன், தாய் கிணற்றில் பிணமாக மீட்பு
கோபி அருகே ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சரவணக்குமார் (47) கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவி சாந்தி (40) மற்றும் இரு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, தனது பெற்றோருடன் வசித்துவந்த அவர், சாணார்புதூரில் உள்ள பஸ்ஸ்டாண்டில் கழுத்தில் ரத்த காயங்களுடன் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த கடத்தூர் போலீசார், உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சரவணக்குமார், காகிதத்தில் ஒரு தகவலை எழுதி கொடுத்தார். அதில், தனது தாய் ராமாயாள் (70) அருகில் உள்ள கிணற்றில் கிடப்பதாக குறிப்பிட்டிருந்தார். தகவலின்படி, சாணார்புதூரில் உள்ள கிணற்றில் ராமாயாளின் உடல் மிதப்பதை கண்ட தீயணைப்பு துறையினர், உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சரவணக்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (75) கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu