அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்

X
By - Nandhinis Sub-Editor |29 March 2025 3:00 PM IST
ஈரோட்டில், அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஓய்வூதிய உயர்வு, மருத்துவ காப்பீடு, வழங்க கோரி போராட்டம்
அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் – ஓய்வூதிய உயர்வு கோரிக்கை
ஈரோடு: தமிழ்நாடு அனைத்து அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் மணிமாலா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். அவர்கள், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியத்துடன் டி.ஏ. (Dearness Allowance) வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வேலுசாமி, குமார், தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu