ரேஷன் கடையில் புளூடூத் பிரச்னை

கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கை
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் புளூடூத் தொழில்நுட்பம் மூலம் கை ரேகை பதிவு கருவி (POS) மற்றும் எடை தராசை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சில இடங்களில் சிக்னல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதோடு, ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகையை இரண்டு முறை அல்லது அதற்கு மேல் பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது அதிக நேர விரயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கைரேகையை ஒருமுறை பதிவு செய்தாலே கணினி செயல்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து சரியான எடையளவில் பொருள்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மூட்டைக்கு 50.650 கிலோ அரிசி இருக்க வேண்டும், எடை குறைவுக்கு அனைத்து அதிகாரிகளும் கூட்டு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் கறுப்பு நிற கோரிக்கை அட்டைகளை அணிந்து, கறுப்பு நிற ஆடையில் நேற்று பணியில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 860 பேர் இந்த எதிர்ப்பில் கலந்து கொண்டு தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu