/* */

காவிரி, பவானி கரையோர மக்களே ஜாக்கிரதை: எச்சரிக்கிறார் தாசில்தார்

வெள்ளம் அதிகரித்துள்ளதால், பவானி, காவிரி ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

HIGHLIGHTS

பவானி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள், அனைவரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, ஈரோடு மாவட்ட கலெக்டர் சார்பில், பவானி தாசில்தார் கேட்டுகொண்டுள்ளார்.

இது குறித்து, பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மேட்டூர் அணை 120 அடியை எட்டும் நிலையில் உள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் எந்நேரமும் திறந்து விடப்படலாம்.

எனவே, பவானி வட்டத்தில் உள்ள சிங்கம்பேட்டை, காடப்பநல்லூர், வராதநல்லூர், சன்னியாசிபட்டி, ஊராட்சிக்கோட்டை, பவானி மற்றும் இதர ஊர்களின் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் அனைவரும், ஆற்றில் குளிக்கவோ , துவைக்கவோ செல்ல வேண்டாம். தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுக்காப்பாக இருக்குமாறு, ஈரோடு மாவட்ட கலெக்டர் சார்பில் கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

Updated On: 9 Nov 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை