நுகர்வோர் நலன் பாதுகாப்பு கூட்டம்

நுகர்வோர் நலன் பாதுகாப்பு கூட்டம் 64 மனுக்கள் அளிப்பு
ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாவட்டத்தில் பதிவு பெற்ற பல்வேறு தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு, நுகர்வோர் உரிமைகள், சிக்கல்கள், தேவைகள் மற்றும் குறைகளை எடுத்துக்கூறினர். கூட்டத்தின் போது, மொத்தம் 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 64 மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த மனுக்களின் மீது விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ. சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்று, நுகர்வோர் பிரச்சினைகள் குறித்த முக்கியமான ஆலோசனைகளை வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu