செம்புளிச்சாம்பாளையத்தில்முனியப்பன் கோவில் பொங்கல் விழா..!

செம்புளிச்சாம்பாளையத்தில்முனியப்பன் கோவில் பொங்கல் விழா..!
X
செம்புளிச்சாம்பாளையத்தில்முனியப்பன் கோவில் பொங்கல் விழா.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில், முனியப்பன் சுவாமி கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, நேற்று நடந்த முதல் வனபூஜையின் போது, முனியப்பன், பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்தபடி கோவில் வனத்தை நோக்கி வந்தனர்.

முனியப்ப சுவாமி கோவில்

அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு பண்டிகை கடந்த, 13ல், பூச்சாட்டுதலுடன் துவங்கி, நேற்று முதல் வன பூஜை நடந்தது.

தேர் ஊர்வலம்

இதில் முனியப்பன், பெருமாள், காமாட்சியம்மன் ஆகிய மூன்று சுவாமிகளின் தேர்களை, மடப்பள்ளியில் இருந்து, இப்பகுதி இளைஞர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக வனத்திற்கு சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் பங்கேற்பு

அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம், தாண்டாம்பாளையம், ஒட்டபாளையம், காட்டுப்பாளையம், மேற்கு காடு, கிழக்கு காடு, பருவாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story
கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!