சவுதியில் இருந்து வந்த இன்ஜினியர் திடீர் மரணம்

சவுதியில் இருந்து வந்த இன்ஜினியர் திடீர் மரணம் – உறவினர்கள் அதிர்ச்சி
அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த மாதேஸ்வரன் (48) சவுதி அரேபியாவின் மஸ்கட்டில் கட்டட பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இரண்டுநாள் முன்பு அவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.
நேற்று காலை, வீட்டில் குளிக்க சென்ற மாதேஸ்வரன் திடீரென பாத்ரூமில் மயங்கி விழுந்தார். இது காண்ந்த குடும்பத்தினர் அவரை உடனே மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குடும்பத்தினரிடமும், சுற்றியுள்ளவர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதேஸ்வரனின் மரணத்துக்கான காரணம் தொடர்பாக, அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu