பண்ணைக்குள் நாய்கள் புகுந்து 110 கோழிகள் பலி!

பண்ணைக்குள் நாய்கள் புகுந்து 110 கோழிகள் பலி!
X
தெருநாய்களின் தாக்குதலில் கோழிகள் பலி பண்ணை உரிமையாளரின் அதிர்ச்சி!

பண்ணைக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 110 கோழிகள் பலி

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே குட்டிபாளையத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் (65) அப்பகுதியில் தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். தற்போது அவர் தனது பண்ணையில் 1,700 பிராய்லர் கோழிகளை வளர்த்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் பண்ணைக்குச் சென்றபோது, கோழிகள் இறந்து கிடந்ததைப் பார்த்து சோமசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். அவரது புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், பண்ணைக்குள் தெருநாய்கள் புகுந்து கடித்ததில் 110 பிராய்லர் கோழிகள் பலியானது தெரிய வந்தது.

மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து கோழிகள் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கோழி வளர்ப்போர் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story