ஈரோட்டில் வணிக வரித்துறையினர் ஆர்ப்பாட்டம்

வணிக வரித்துறையினர் ஈரோடில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு: தமிழ்நாடு உதவி ஆணையாளர், வணிக வரி அலுவலர் மற்றும் துணை வணிக வரி அலுவலர் சங்கம் சார்பில் ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ராகவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருமதி மஞ்சுரேக்கா முன்னிலை வகித்தார். மேலும், மாவட்ட செயலாளர் திரு. சுரேஷ்குமார், பொருளாளர் திரு. பாலசுப்பிரமணியம் மற்றும் ஓய்வு பெற்றோர் அனைத்து துறை அலுவலர் சங்க நிர்வாகி திரு. கதிர்வேல் ஆகியோர் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி அலுவலர்களின் வேலைப்பளுவைக் குறைக்க வேண்டும், பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும், வரி விதிப்பு ஆணைகளில் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் வழங்காமல் தரத்துக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
துறை அலுவலர்கள் அனைவரும் அலுவலகத்தில் இருந்து ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu