விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் முத்துசாமியின் பதில்

விவசாயிகள் நிவாரணம் குறித்து அமைச்சர் விளக்கம்
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வெறிநாய்களின் தாக்குதலில் பலியான கால்நடைகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. இதன் கீழ், ஒரு ஆட்டுக்கு ₹6,000 மற்றும் கோழிக்கு ₹200 இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு பெரியார்நகரில் நேற்று விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், சந்தை மதிப்பின் அடிப்படையில் ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். என விவசாயிகள் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார். ஆனால், அரசின் தற்போதைய நிதி நிலை காரணமாக சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க இயலாது என விளக்கினார். மேலும், இந்த ஆண்டில் வெறிநாய்கள் கடித்துக் கொன்ற கால்நடைகளின் பட்டியல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
விவசாயிகள், வெறிநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கையிட, தெருநாய்கள் ஒழிப்பு விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதால், விவசாய சங்கங்கள் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடலாம் என அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu