ஈரோடு ஆவின் பால் பண்ணையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆய்வு

ஈரோடு ஆவின் பால் பண்ணையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆய்வு
X

ஈரோடு மாவட்டம் சித்தோட்டிலுள்ள ஆவின் நிறுவனத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, ஆவின் நிறுவனத்திலுள்ள பால் குளிரூட்டும் பகுதி , பால்கோவா, வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட ஆவின் பொருட்களை உற்பத்தி செய்வதை ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து குறித்தும், விற்பனை குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆயிவின் போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுண்ணி, பால்வளத்துறை ஆணையர்பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future