/* */

திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
X

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நிற்கும் சரக்கு லாரியால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி வழியாக கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது.

தமிழகம் - கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் இந்த திம்பம் மலைப்பாதையில் 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் இன்று காலை குஜராத் மாநிலத்திலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் பொழுது லாரி பழுதாகி நின்றது.

இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கும் செல்லவேண்டிய அனைத்து சரக்கு லாரிகள், வேன்கள் செல்ல முடியாமல் இருபுறமும் வரிசையாக நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 22 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி