/* */

உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 4,78,690 ரூபாய் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே இருவேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 4,78,690 ரூபாய் பறிமுதல்.

HIGHLIGHTS

உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 4,78,690 ரூபாய் பறிமுதல்
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி அரேப்பாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1,75,730 ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த வெங்காய வியாபாரி சந்திரன் என்பதும், சாம்ராஜ் நகரில் இருந்து கோவை சென்று வெங்காயம் விற்பனை செய்த பணம் என்றும் தெரிய வந்தது.

அதே போல் தாளவாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர் ராமசாமி எந்த ஆவணம் இன்றி தனியார் பேருந்தில் கொண்டு வந்த 3,02,960 ரூபாயை கொண்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து மொத்த பணமும் கைப்பற்றப்பட்டது. இரு வேறு நபர்களிடம் இருந்து மொத்தம் 4,78,690 ரூபாய் தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட தொகையை சத்தியமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 3 April 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?